மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். தமிழகம் எங்கும் இந்த வீர விளையாட்டு நடந்தாலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து நடத்த வேண்டும் என கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், […]
