100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 'நேர்'

மலையாளத்தில் கடந்த வருட இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியானது 'நேர்'. காரணம் ஏற்கனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருந்தது தான். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட படத்தின் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் ஒரு நீதிமன்ற அறைக்குள்ளேயே நடக்கும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு சாதுரியமாக வழக்காடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞராக பிரியாமணியும் நடித்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இந்த படத்தை இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப். இந்த படம் வெளியான நாளிலிருந்து மிகச் சீரான வேகத்தில் வசூலை ஈட்டி வந்த நிலையில் படம் வெளியாகி, தற்போது 25 ஆவது நாளில் நூறு கோடி வசூல் கிளப்பில் வெற்றிகரமாக இணைந்துள்ள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.