பழனி நாளை பழனிமலை அடிவாரத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. ஏராளமான பக்தர்கள் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை, பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் என்றால் லட்சக்கணக்கானோர் பழனிக்கு திரண்டு வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே பழனி அடிவாரம், கிரிவீதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர். பழனிமலை […]
