அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த மாதவன்

தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் மித்ரன் ஆர்.ஜவஹர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பின் மித்ரன்.ஆர்.ஜவஹர், நடிகர் மாதவனை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகிறார். இதன் கதையை மாதவனே எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷர்மிளா மன்திரி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்றது. இதில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை மாதவன் நடித்து முடித்துள்ளார் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.