சென்னை ஆளுநர் பங்கேற்ற விழாவுக்கு வந்த மாணவர்களுக்கு மட்டுமே வருகை பதிவு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் விழாவில் கலந்து […]
