ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, சீனாவின் குயின்வென் ஷெங்குடன் மோதினார்.

இதில் ஷெங் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இரண்டாவது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கவூப்புடன் மோதினார். இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ஷெங் ஆகியோர் மோதுகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.