டில்லி மம்தா பானர்ஜி 15 நிமிடங்களாவது ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். நாட்டு மக்களுக்கு பாஜகவிடம் இருந்து நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதியன்று தொடங்கிய இந்த பயணமானது மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. நடைப்பயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை நாகாலாந்து, அசாமைக் கடந்து மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்துள்ளது. […]
