234 நாட்களாக விடாமல் துரத்திய ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறார் . அட்லீ தயாரிக்கும் இந்த படத்தை கலீஷ் என்பவர் இயக்குகிறார். தெறி படத்தில் தமிழில் சமந்தா நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் பூஜை நடைபெற்றது. மேலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது பிறந்த நாளில் ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கிருஷ்ணா என்ற ஒரு ரசிகர் 234 நாட்களாக இடைவிடாமல் ட்வீட் போட்டு ரிப்ளை செய்யுமாறு வேண்டுகோள் வைத்து வந்திருக்கிறார். அவரது பதிவை 234 வது நாளில் பார்த்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அந்த பதிவில், 234, இது மிகவும் பேன்ஸியான நம்பர். உங்களுக்கு தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை அதிகம் நேசிக்கிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.