சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான திமிறி எழுடா என்ற பாடல் AI தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை இந்தப் பாடலில் பயன்படுத்தியது சர்ச்சையானதை தொடர்ந்து, அதுகுறித்து ஏஆர் ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார்.
