சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல இடங்களில் சாதி சான்றிதழ் என்பது இன்றியமையாததாகிறது. இந்த சாதிச் சான்றிதழ்களை அந்தந்த பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். ஆனால் இதற்குச் சமீபகாலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது இந்த சாதி சான்றிதழ் ஒருவரைத் தாழ்வாக நினைக்க தூண்டுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். அத்தகையோர் தாங்கல் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று […]
