
மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா!
நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. தொடர்ந்து பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். இவருக்கு ‛மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமாகி ஒரு வருடத்திலேயே அரவிந்த் இருதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த பெருந்துயரை மெல்ல மெல்ல கடந்து வந்த ஸ்ருதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‛லெட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியின் கம்பேக்கை பாராட்டி வருகின்றனர்.