சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துள்ளது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். தனக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆணையம் அதை பரிசீலிக்கவில்லை. எனவே, தங்களுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இது குறித்து […]
