கள்ளக்குறிச்சி: ஒட்டுமொத்த தமிழ்நாடும் பதற்றமாக ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு உள்ளது என்றால் அது கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாகத்தான். முதலில் 20க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 100 பேர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் விஷ சாராயம் அருந்தியவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
