ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டெல்கோய் காவல் எல்லைக்குட்பட்ட திமிரிமுண்டா கிராமத்தில் எட்டு மூட்டை நெல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் சுரேஷ் பதான் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு நபர்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை திருடிச் சென்றுள்ளனர். சுரேஷின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு கண்விழித்த அக்கம்பக்கத்தினர், சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேர் சென்றதை பார்த்துள்ளனர். அவர்களை விசாரித்த போது […]
