முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்: பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? 

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார்.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்த சூழலில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான், ராணுவ தளபதி உபேந்​திர திவிவே​தி, கடற்​படை தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​தனர்.

பிரதமரின் இல்​லத்​தில் சுமார் 90 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. அப்​போது, பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக​வும், அதற்கு தக்க பதிலடி கொடுப்​பது குறித்​தும் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “தீ​விர​வாதத்தை வேரறுக்க வேண்​டும். பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்​டும். எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது, எந்த இடங்​களில் தாக்​குதல் நடத்த வேண்​டும், எப்​போது தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம்” என்று தெரி​வித்​தார்​.

அமித் ஷா ஆலோசனை: ​முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மத்​திய உள்​துறைச் செயலர் கோவிந்த் மோகன், எல்லை பாது​காப்​புப் படை, அசாம் ரைபிள்​ஸ், தேசிய பாது​காப்​புப் படை, மத்​திய ரிசர்வ் போலீஸ் படை, மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யின் தலை​வர்​கள், இயக்​குநர்​கள் பங்​கேற்​றனர். இந்​த கூட்​டத்​தில் ஜம்மு காஷ்மீரில் மேற்​கொள்​ளப்​படும் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கைகள் குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

ஜம்மு காஷ்மீர் பகு​தி​யில் இந்​திய ராணுவ​மும், மத்​திய ஆயுத போலீஸ் படை​யும் நேற்று போர் பயிற்​சி​யில் ஈடு​பட்​டன. இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்​லைப் பகு​தியை சேர்ந்த கிராம மக்​களுக்கு ராணுவம் சார்​பில் நேற்று சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

காஷ்மீரின் ஜம்மு பகு​தி​யில் தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி) கமாண்​டோக்​கள், மாநில போலீ​ஸார் இணைந்து பாது​காப்பு ஒத்​தி​கையை நடத்​தினர். ஜம்மு பகு​தி​யில் உள்ள இந்து கோயில்​களில் இந்த ஒத்​திகை நடத்​தப்​பட்​டது. மேலும், ராணுவம் தரப்​பில் காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று என்​க​வுன்ட்​டர்​கள் நடத்​தப்​பட்​டன. இதுகுறித்த தகவல்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. ஜம்மு காஷ்மீரில் மீண்​டும் தீவிர​வாத தாக்​குதல் நடத்த தீவிர​வாத அமைப்​பு​கள் சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக காஷ்மீரில் 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

காஷ்மீரில் புதிய தளபதி: ​காஷ்மீரின் உதம்​பூரில் இந்​திய ராணுவத்​தின் வடக்கு பிராந்​திய தலைமை அலு​வல​கம் அமைந்​துள்​ளது. காஷ்மீர், லடாக் எல்​லைப் பகுதி கட்​டுப்​பாடு முழு​வதும் வடக்கு பிராந்​தி​யத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. இந்த பிராந்​திய தளப​தி​யாக லெப்​டினென்ட் ஜெனரல் சுசீந்​திர குமார் பணி​யாற்றி வந்​தார். அவர் விரை​வில் ஓய்வு பெற உள்​ளார்.

இந்த சூழலில் ராணுவ வடக்கு பிராந்​திய தளப​தி​யாக லெப்​டினென்ட் ஜெனரல் சர்மா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

துப்பாக்கி சண்டை: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு இந்​திய, பாகிஸ்​தான் எல்​லை​யில் அசா​தாரண சூழ்​நிலை நில​வு​கிறது. உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 4 நாட்​களாக இந்​திய,பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச்சண்டை நடை​பெற்று வரு​கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக எல்​லைப் பகுதி மக்​கள் பதுங்கு குழிகளை அமைத்​துள்​ளனர். பல்​வேறு கிராமங்​களில் ராணுவத்​தின் உதவி​யுடன் மிகப்​பெரிய ரகசிய பதுங்கு அறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பதுங்கு அறை​களில் சமையலறை, கழிப்​பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு மாதத்​துக்​கு தேவை​யான மளி​கைப் பொருட்​களும் சேகரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.