சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு மாவட்​டம் சிவகிரி அருகே​யுள்ள விளக்​கேத்தி பகு​தியில் உள்ள மேகரை​யான் தோட்​டத்​தைச் சேர்ந்தவர் ராம​சாமி (75).

இவரது மனைவி பாக்​கி​யம் (65). இவர்​களது மகன் கவிசங்​கர், மகள் பானுமதி ஆகியோ​ருக்கு திருமண​மான நிலை​யில், ராம​சாமி தன் மனைவி பாக்​கி​யத்​துடன் தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், முத்​தூரில் வசித்து வரும் கவிசங்​கர், ராம​சாமிக்கு போன் செய்​த​போது அவர் எடுக்​க​வில்லை. இதையடுத்​து, அரு​கில் வசிக்​கும் உறவினர்​களுக்கு தகவல் தெரி​வித்​து, தோட்​டத்​துக்​குச் சென்று பார்க்​கு​மாறு கூறி​யுள்​ளார்.

இதன்​படி, கவிசங்​கரின் உறவினர்​கள் தோட்​டத்​துக்​குச் சென்று பார்த்​த​போது, அங்கு ராம​சாமி மற்​றும் பாக்​கி​யம் ஆகியோர் கொலை செய்​யப்​பட்​டுக் கிடந்​தது தெரிய​வந்​தது. மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில் குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்​.பி. சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்டனர்.

ராம​சாமி-​பாக்​கி​யம் ஆகியோர் தனி​யாக வசிப்​ப​தையறிந்த கும்பல், அவர்​களைக் கொலை செய்​து, பாக்​கி​யம் அணிந்​திருந்த 15 பவுன் நகைகள் மற்​றும் பீரோ​வில் வைத்​திருந்த ரொக்​கத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றது தெரிய​வந்​தது. அவர்​களது உடல் அழுகிய நிலை​யில் காணப்​பட்​ட​தால், கொலை நடந்து 3 நாட்​களாகி​யிருக்​கலாம் என்று போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

கொலை​யாளி​களைப் பிடிக்க ஏடிஎஸ்பி விவே​கானந்​தன் தலை​மை​யில் 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கொல்​லப்​பட்ட இரு​வரது உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்​காக பெருந்​துறை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. அவர்​களது உடல்​களை உறவினர்​கள் வாங்க மறுத்​தனர். 30 நாட்​களுக்​குள் குற்​ற​வாளி​களைக் கண்​டு​பிடிப்​போம் என போலீ​ஸார் உறுதி அளித்​ததைத் தொடர்ந்​து, உடல்​களைப் பெற்​றனர்.

சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைவு: சிவகிரி அருகே வயதான தம்​பதி கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித்தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் சட்​டம்​- ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. மக்​கள் இரவில் நிம்​ம​தி​யாக தூங்க முடி​யாமல், அச்ச நிலை​யில் உள்​ளனர். இனி​யா​வது சட்​டம்​-ஒழுங்​கைப் பாது​காப்​ப​தில் கவனத்​துடன் செயல்பட வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கொங்கு பகு​தி​யில் மீண்​டும் மீண்​டும் கொலை சம்​பவங்​கள் நடப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. திமுக ஆட்​சி​யில் சிறு குழந்​தைகள் முதல் முதி​யோர் வரை யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. எனவே, சட்​டம்​-ஒழுங்கை சீரமைக்க முதல்​வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: அடுத்​தடுத்து நடக்​கும் கொலைகளும், அதற்​குக் காரண​மானவர்​கள் கண்​டு​பிடிக்​கப்​ப​டாததும் மக்​கள் மத்​தி​யில் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: தொடர் படு​கொலைகளை திமுக அரசால் தடுக்க முடிய​வில்​லை. காவல் துறையைக் கையில் வைத்​திருக்​கும் முதல்​வர், உரிய கவனத்​துடன் செய்​லபட வேண்​டும்.

இதே​போல, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்​டோரும் சிவகிரி கொலை-​கொள்ளை சம்​பவத்​துக்கு கண்டனம் தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.