பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​படு​கிறது.

அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்​பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுத்​து​விட்​டனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது. இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள லால் மசூ​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு பிரசங்​கத்​தின்​போது, பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா அப்​துல் அஜீஸ் காசி, “இந்​தி​யா​வுடன் போர் தொடுக்க வேண்​டுமா என்​ப​தற்கு ஆதரவு தெரி​விப்​பவர்​கள் கையை உயர்த்த வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார். ஆனால் ஒரு​வர் கூட கையை உயர்த்​த​வில்​லை.

மவுலானா கண்டனம்: இதையடுத்​து, பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஆட்​சி​யாளர்​களுக்கு மவுலானா கடும் கண்​டனம் தெரிவித்தார். மேலும், “இந்​தி​யா​வை​விட பாகிஸ்​தான் அடக்​கு​முறையைக் கையாள்​கிறது. குறைந்​த​பட்​சம் இந்​தியா ஒரு​போதும் லால் மசூதி அல்​லது வஜிரிஸ்​தான் மீது குண்டு வீச​வில்​லை” என்​றார். கடந்த 2007-ம் ஆண்டு லால் மசூ​தியை முற்​றுகை​யிட்​டது மற்​றும் வஜிரிஸ்​தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்​குதல் உள்​ளிட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தின் உள்​நாட்டு அடக்​கு​முறையை அவர் மறை​முக​மாக குறிப்​பிட்​டார்.

மேலும் தற்​போதைய ஆட்​சி​யில், பலூச் மற்​றும் பஷ்துன் பிரிவு மக்​கள், இம்​ரான் கானின் பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் கட்​சி​யினர் (பிடிஐ), மத குரு​மார்​கள் மற்​றும் பத்​திரிகையாளர்​கள் காணா​மல் போன விவ​காரத்​தை​யும் அவர் நினை​வு​கூர்ந்​தார். “பஷ்துன் பிரிவு மக்​கள் மீது ராணுவம் அடக்​கு​முறையைக் கையாண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தியா பாகிஸ்​தானை தாக்​கி​னால் பஷ்துன்​களாகிய நாங்​கள் இந்​திய ராணுவத்​தின் பக்​கம் நிற்​போம்” என்​றும் மவுலானா கூறி​யுள்​ளார்.

இந்த கருத்​துகள் சர்ச்​சைக்​குரியவை என்​றாலும், உள்​நாட்​டில் நில​வும் அதிருப்​தியை பிர​திபலிக்​கின்​றன. குறிப்​பாக, பலூச் மற்​றும் பஷ்துன் பிரி​வினரும் பிடிஐ கட்​சி​யினரும் ராணுவத்​துக்கு சவால் விடுத்​துள்​ளனர். இதனால் பாகிஸ்​தானில் உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

சிறு​வர்​கள் வெறுப்பு: இங்​கிலாத்​தில் பாகிஸ்​தானிய தந்தை மற்​றும் இந்​திய தாய்க்கு பிறந்​தவர் அட்​னான் சாமி. பிரபல பாடகரும் இசை அமைப்​பாள​ரு​மான இவர், 2016-ல் இந்​தி​யக் குடி​யுரிமை பெற்​றார். இவர் தனது ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அஜர்​பைஜான் நாட்​டின் பாகு நகர அழகிய வீதி​களில் நடக்​கும்​போது பாகிஸ்​தான் சிறு​வர்​கள் சிலரை சந்​தித்​தேன். அப்​போது அவர்​கள் என்​னிடம், “நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலி. சரி​யான நேரத்​தில் நீங்​கள் பாகிஸ்​தானை விட்டு வெளி​யேறி விட்​டீர்​கள்.

நாங்​களும் பாகிஸ்​தானை விட்டு வெளி​யேற விரும்​பினோம். நமது ராணுவத்தை நாங்​கள் வெறுக்​கிறோம். நமது நாட்டை அவர்​கள் அழித்​து​விட்​டனர்” என்று கூறினர். இதற்கு நான், “இதனை நான் பல ஆண்​டு​களுக்கு முன்பே உணர்ந்​து​விட்​டேன்​” என்​று கூறினேன்​. இவ்​வாறு அட்​னான்​ ​ சாமி கூறியுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.