வணிகர்களின் நலனை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

மறைமலை நகர்: வணி​கர்​கள் நலனை பாது​காக்க அதி​முக உறு​துணை​யாக இருக்​கும் என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு அனைத்து வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பின் சார்​பில் 42வது வணி​கர் தினம் மற்​றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகு​தி​யில் நடை​பெற்​றது. இதில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணி​கர்​கள் நலனில் அதிக அக்​கறை கொண்​ட​வர்​கள். சில்​லரை வணி​கத்​தில் அந்​நிய முதலீடு என்று வந்​த​போது மக்​களவை​யில் அந்த மசோ​தாவை அதி​முக எதிர்த்​து. அதி​முக வணி​கர்​களின் வேண்​டு​கோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியா​பாரம் நடத்த சிறப்பு அரசு உத்​தரவு அளிக்கப்பட்டது.

மக்​களவை​யில் சில்​லரை வணிக விவ​காரத்​தில் எதிர்ப்பு தெரிவிக்​காமல் விட்​டிருந்​தால் தமிழ்​நாட்​டில் உள்ள லட்​சோப லட்​சம் சிறு வணி​கர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட நிலை உரு​வாகி இருக்​கும். இன்று வணி​கர்​களுக்கு தங்​களை காவலாக காட்​டிக் கொள்​ளும் திமுக அன்று மத்​திய காங்​கிரஸ் அரசுக்கு ஆதர​வாக நாடாளு​மன்​றத்​தில் இரு அவை​களி​லும் சிறு வணி​கத்​தில் அந்​நிய முதலீடு மசோதா வாக்​கெடுப்பு வந்த போது அந்​நிய முதலீட்​டுக்கு ஆதரவு தெரி​வித்​தது.

வணி​கர்​கள் ஒற்​றுமை​யாக செயல்​பட்​டால் சிறு வணி​கத்​தில் கார்ப்​பரேட் கம்​பெனிகள் ஆதிக்​கத்தை கட்​டுப்​படுத்த முடி​யும். முக்​கிய​மாக அந்​நிய பன்​னாட்டு நிறு​வனங்​கள் எந்த ரூபத்​தில் தமிழகத்​தில் வந்​தா​லும் அதை தடுப்​ப​தற்கு அதி​முக உங்​களுக்கு எப்போதும் துணை நிற்​கும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.