பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள்

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்​போது, “வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்​தோம். அப்​போது மீண்​டும் குண்டு வெடித்​தது. இதனால் அச்​சமடைந்த நாங்​கள், குழந்​தைகளு​டன் வீட்​டை​விட்​டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார்.

பாரதத்தின் பதிலடி: அமைச்சர் அமித் ஷா பதிவு: பஹல்​காமில் நமது அப்​பாவி சகோ​தரர்​களை கொன்​றதற்​கான பாரதத்​தின் பதிலடி​தான் ஆபரேஷன் சிந்​தூர் என்று அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, ‘எக்​ஸ்’ தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:
நமது ஆயுதப் படைகள் குறித்து பெருமை கொள்​கிறேன். பஹல்​காமில் நமது அப்​பாவி சகோ​தரர்​களை கொடூர​மாக கொன்​றதற்​கான பாரதத்​தின் பதிலடி​தான் ஆபரேஷன் சிந்​தூர். இந்​தியா மற்​றும் அதன் மக்​கள் மீது நடத்​தப்​படும் எந்​தவொரு தாக்​குதலுக்​கும் தக்க பதிலடி கொடுக்க மோடி அரசு உறு​திபூண்​டுள்​ளது. தீவிர​வாதத்தை வேருடன் ஒழிப்​ப​தில் பாரதம் உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு அமித் ஷா கூறி​யுள்​ளார்​.

இந்திய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தின. இதில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத முகாம்கள் சேதமடைந்தன. இது தொடர்பான பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.