உள் இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம்: சித்​திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்​தின் சார்​பில் மாமல்​லபுரம் அருகே திரு​விடந்​தை​யில் `சித்​திரை முழுநிலவு வன்​னிய இளைஞர் பெரு​விழா மாநாடு’ நேற்று மாலை நடை​பெற்​றது.

12 ஆண்​டு​களுக்கு பிறகு மாநாடு நடை​பெறு​வ​தால் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளி​யிட்​டார். பாமக தலை​வர் அன்​புமணி, கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்​செய​லா​ளர் ஏ.கே.மூர்த்​தி, பசுமை தாயகம் தலை​வர் சவுமியா அன்​புமணி, செய்தி தொடர்​பாளர் க.பாலு, செயற்​குழு உறுப்​பினர் ஈக்​காட்​டுத்​தாங்​கல் இரா.சிவகுமார், வன்​னியர் சங்​கத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி உட்பட முக்​கிய நிர்​வாகி​கள், ஆந்​தி​ரா, கர்​நாடகா மாநிலங்​களை சேர்ந்த அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்​றனர்.

கலைநிகழ்ச்​சிகளு​டன் தொடங்​கிய மாநாட்​டில் வன்​னியர் சங்க கொடியை ராம​தாஸும் அன்​புமணி​யும் ஏற்றி வைத்​தனர். தொடர்ந்து இடஒதுக்​கீடு போராட்​டம் குறித்து விளக்​கப்​பட்​டது. ராம​தாஸ் வாழ்க்கை வரலாறு ஆவணப்​படம் திரை​யிடப்​பட்​டது. ​மாநாட்டில் பாமக நிறு​வனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: வன்​னியர்​களுக்​கான 10.5 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி நிச்​சய​மாக போராட்​டம் அறிவிக்​கப்​படும். அது இது​வரை நடக்​காத அளவி​லான போராட்​ட​மாக இருக்​கும்.

அன்று நாம் தனி​யாக யானை சின்​னத்​தில் நின்று 4 தொகு​தி​களில் வெற்​றி​பெற்​றோம். இன்று கூட்​ட​ணி​யில் சேர்ந்து 5 தொகு​தி​யில் வெற்​றி​பெற்​றிருக்​கிறோம். இதற்​காக நாம் வெட்​கப்பட வேண்​டும். நமது மக்​களே நமக்கு ஓட்டு போட​வில்​லை. இனி அப்​படி​யிருக்க கூடாது. அனை​வரும் பொறுப்​புடன் பணி​யாற்ற வேண்​டும்.

கூட்​டணி பற்றி நான் முடிவு செய்​வேன். அதைப்​பற்றி நீங்​கள் கவலைப்பட வேண்​டாம். நீங்​கள் எம்​எல்​ஏ​வாக வேண்​டுமென்​றால் உழைக்க வேண்​டும். கட்​சியை உயிர் என்று நினைத்​தால் தான் கோட்​டையை பிடிக்க முடி​யும். இந்த கட்சி தனிமனிதனின் சொத்து அல்ல. இதை மனதில் வைத்​துக்​கொள்​ளுங்​கள்​. இவ்​வாறு அவர் பேசி​னார்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

முதல்​வருக்கு மனமில்​லை: அன்​புமணி பேசி​ய​தாவது – ஆளும் கட்​சிகள் நம்மை வாக்கு வங்​கி​களாக பயன்​படுத்​துகின்​றன. உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தும் உள்​ஒதுக்​கீடு வழங்க தமிழக முதல்​வருக்கு மனமில்​லை. சாதி​வாரி கணக்​கெடுப்பை மத்​திய அரசு​தான் எடுக்க வேண்​டும் என பொய்​யான செய்​தியை பேசி வரு​கிறார். இந்த சமு​தா​யத்தை எப்​படி முன்​னேற்ற வேண்​டும் என முதல்​வர் திட்​ட​மிட்​டிருக்க வேண்​டும். தமிழகத்​தில் 69 சதவீத இடஒதுக்​கீட்​டுக்கு ஆபத்து வந்​திருப்​பது குறித்​தும் முதல்​வர் ஸ்டா​லினுக்கு கவலை​யில்​லை.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி இருந்​திருந்​தால் ஒரே கையெழுத்​தில் கணக்​கெடுப்பை நடத்​தி​யிருப்​பார். பிற தலை​வர்​களைப் போல அத்​து​மீறு என்​றெல்​லாம் சொல்ல மாட்​டேன். இளைஞர்​கள் அமை​தி​யாக இருந்து படித்து வேலைக்கு போகச் சொல்​வேன். நாம் ஆளக்​கூடிய காலம் வந்​து​விட்​டது. பாமக ஆட்​சிக்கு வந்​தால் உண்​மை​யான சமூக நீதியை நிலை​நாட்​டு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார். தமிழ்​நாட்​டில் 69 சதவீத இடஒதுக்​கீட்டை பாது​காக்க மாநில அரசின் சார்​பில் தனி​யாக சாதி​வாரி சர்வே நடத்​தப்பட வேண்​டும்.

உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில் வன்​னியர்​களுக்கு உடனடி​யாக உள்​இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். பட்​டியலின மக்​கள்​தொகைக்கு ஏற்ப மேலும் 2 சதவீத இடஒதுக்​கீட்டை உயர்த்த வேண்​டும். ஓபிசி இடஒதுக்​கீட்​டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்​டும். வடமாவட்​டங்​களின் முன்​னேற்​றத்​துக்கு சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும். முழு மது​விலக்கு அமல்​படுத்த வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 14 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதனிடையே மா​நாட்​டுக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​ சீமான்​ உள்​ளிட்​டோர்​ வாழ்த்​து தெரிவித்​துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.