சென்னை இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2021ல் கரும்பு விவசாயி சின்னத்திலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சி உரிய நேரத்தில் விண்ணப்பிக்க தவறியதால் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது. தேர்தல் ஆணையம் அப்போது […]
