தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார்

தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

இந்​தி​யா​வில் நாள்​தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்​டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்​களில் பயணம் மேற்​கொள்​கின்​றனர். இதை கருத்​தில் கொண்டு ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின் கீழ் நாடு முழு​வதும் 1,318 ரயில் நிலை​யங்​களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக கடந்த 2023-ம் ஆண்​டில் 58 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்​தில் மேம்​படுத்​தப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து இரண்​டாம் கட்​ட​மாக நாடு முழு​வதும் 553 ரயில் நிலை​யங்​களை புதுப்​பிக்​கும் திட்​டத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி 26-ம் தேதி அடிக்​கல் நாட்​டி​னார். இதில் 103 அமிர்த ரயில் நிலை​யங்​கள் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன. ராஜஸ்​தானின் தேஷ்நோக் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் 103 ரயில் நிலை​யங்​களை​யும் பிரதமர் மோடி காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார்.

இதன்​படி உத்தர பிரதேசத்​தில் 19, குஜ​ராத்​தில் 16, மகா​ராஷ்டி​ரா​வில் 15, தமிழ்​நாட்​டில் 9, ராஜஸ்​தானில் 8, மத்​திய பிரதேசத்​தில் 6, கர்​நாட​கா​வில் 5, சத்​தீஸ்​கரில் 5, தெலங்​கா​னா​வில் 3, மேற்​கு​வங்​கத்​தில் 3, ஜார்க்​கண்​டில் 3, கேரளா​வில் 2, பிஹாரில் 2, புதுச்​சேரி, இமாச்சலபிரதேசம், அசாம், ஹரி​யா​னா​வில் தலா 1 உட்பட மொத்​தம் 103 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்​தில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன.

இந்த ரயில் நிலை​யங்​களில் மின் தூக்​கி​கள், நகரும் படிக்​கட்​டு​கள், இலவச வைபை, நவீன மின்​னணு தகவல் பலகைகள், கூடு​தல் வசதி​களு​டன்​கூடிய காத்​திருக்​கும் அறை, சுத்​த​மான குடிநீர், சுகா​தா​ர​மான கழிப்​பறை​கள், பேருந்​து, மெட்ரோ ரயில் சேவை​களை ஒன்​றிணைக்​கும் வசதி, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான வசதி, பார்​வையற்​றோருக்​கான நடை​பாதை, விசால​மான பார்க்​கிங் வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

தேஷ்நோக் ரயில் நிலை​யத்​தில் பள்ளி மாணவ, மாணவி​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி சிறிது நேரம் கலந்​துரை​யாடி​னார். அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த கண்​காட்​சி​யை​யும் அவர் பார்​வை​யிட்​டார்​. முன்​ன​தாக கர்​னி தேவி கோயி​லில்​ அவர்​ வழிபாடு நடத்தினார்.

தமிழகத்தில்… தமிழகத்தில் பணிகள் நிறைவடைந்த 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.பரங்​கிமலை ரயில் நிலை​யம் ரூ.11.05 கோடி​யிலும், சாமல்​பட்டி நிலை​யம் ரூ.8 கோடி​யிலும், ரங்​கம் ரயில் நிலை​யம் ரூ.6.77 கோடி​யிலும், திரு​வண்​ணா​மலை ரயில் நிலை​யம் ரூ.8.27 கோடி​யிலும், போளூர் ரயில் நிலை​யம் ரூ.6.15 கோடி​யிலும் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அதே​போல், சிதம்​பரம் ரயில் நிலை​யம் ரூ.5.96 கோடி​யிலும், விருத்​தாசலம் ரயில் நிலை​யம் ரூ.9.17 கோடி​யிலும், மன்​னார்​குடி ரயில் நிலை​யம் ரூ.4.69 கோடி மதிப்​பிலும், குழித்​துறை ரயில் நிலை​யம் ரூ.5.35 கோடி​யிலும் மேம்​பாட்​டுப்​ பணி​கள்​ நிறைவடைந்​துள்​ளன. பரங்​கிமலை ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்​து​கொண்டார். அவர் பேசுகையில், “மும்பை – அகம​தா​பாத்​துக்கு புல்​லட் ரயில் விரை​வில் வர உள்​ளது. சென்னை ஐசிஎஃப்​-ல் தயாரிக்​கப்​படும் ரயில், இந்​தியா மட்​டுமல்ல உலகம் முழு​வதும் பயன்​படுத்​தப்​படு​கிறது. முன்பு நாம் இறக்​குமதி செய்து கொண்​டிருந்​தோம். தற்​போது, ரூ.50,000 கோடிக்கு மேல் பாது​காப்பு பொருட்​களை ஏற்​றுமதி செய்​கிறோம். இது​தான் புதிய பாரதம்” என்றார்.இந்​நிகழ்ச்​சி​யில், பொது​மேலா​ளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட கூடு​தல் மேலா​ளர் தேஜ்பிர​தாப் சிங் தொழில​திபர் நல்லி குப்​பு​சாமி உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.