வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை பெய்​தது. மழை பாதிப்​பால் இரு​வர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர்.

நீண்ட நாட்​களாக டெல்​லி​யில் வெப்​பம் அதி​கரித்து வந்த நிலை​யில், தற்​போது பெய்​துள்ள மழை​யால் ரம்​மிய​மான சூழல் நில​வுவ​தால் பொது​மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். பலத்த காற்று வீசி வரு​வ​தால் நொய்​டாவுக்கு அருகே உள்ள பகு​தி​களில் மரங்​கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த வாக​னங்​களின் மீது விழுந்​தது. இதனால், பல இடங்​களில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. அத்​துடன் மின் இணைப்​பு​களும் துண்​டிக்​கப்​பட்​டன.

டெல்​லியி​லிருந்து ஸ்ரீநகர் புறப்​பட்ட இண்​டிகோ விமானத்​தின் முன்​பகுதி ஆலங்​கட்டி மழை​யால் சேதமடைந்​தது. மேலும், டெல்லி விமான நிலை​யத்​தில் உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச விமான போக்​கு​வரத்​தும் பாதிக்​கப்​பட்​டது. 12 விமானங்​கள் ஜெய்ப்​பூருக்​கும், ஒரு சர்​வ​தேச விமானம் மும்​பைக்​கும் திருப்பி விடப்​பட்​டது. இதனிடையே, இந்​திய வானிலை மையம், வெள்ளி மற்​றும் சனிக்​கிழமை​களில் இடி​யுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்​பிருப்​ப​தாக அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது.

உத்தர பிரதேசத்​தில் காலநிலை​யில் திடீர் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. மாநிலத்​தின் பல பகு​தி​களில் கடந்த 24 மணி நேரத்​தில் இடி மின்​னலுடன் கூடிய மழை பெய்​தது. இதில், 34 பேர் உயி​ரிழந்​தனர். குறிப்​பாக, காஸ்​கஞ்ச், பதேபூர் பகு​தி​கள் கனமழை​யால் மிக​வும் மோச​மாக பாதிப்​புக்கு உள்​ளாகி​யுள்​ளன. புயல் தொடர்​பான சம்​பவங்​களால் இப்​பகு​தி​களில் 5 பேர் உயி​ரிழந்​தனர். கட்​டிடங்​கள், மரங்​கள் பெயர்ந்து விழுந்​த​தில் சாலைகளில் போக்​கு​வரத்து முடங்​கியது. அதனை சீரமைக்​கும் பணி​களில் உள்​ளூர் நிர்​வாகத்​தினர் போர்க்​கால அடிப்​படை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.