உ.பி.யில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த உ.பி.யைச் சேர்ந்த 104 வயது கைதி விடுவிக்கப்பட்டார்.

உத்தர பிரதேசம் கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தவர். இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றம் கடந்த 1982-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 3 பேர் இறந்துவிட்டனர்.

லகான் மட்டும் 104 வயதில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இவரை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை விடுவிக்கப்பட்ட லகான் அவரது மகள் வீட்டுக்கு சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.