சென்னை: நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதுபோல, ராகுல் காந்தி தனது எக்ஸ் […]
