சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026ல் தங்களது பயணத்தை முடித்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இமாலய வெற்றி பதிவு செய்தது. இந்த சீசன் முழுவதும் மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை. மேலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெறாமல் போனதும் இதுவே முதல் முறை. மெகா ஏலத்தில் செய்த சில தவறுகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
மேலும் படிங்க: இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!
இருப்பினும் சில வீரர்களின் காயம் காரணமாக மாற்று வீரர்களாக சென்னை அணியில் இணைந்த இளம் வீரர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல், டெவால் பிரவீஸ் போன்ற வீரர்கள் விளையாடிய சில போட்டிகளிலேயே தங்களை திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது சென்னை அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்களை பற்றி பார்ப்போம்.
கேப்டன் ருத்ராஜ்க்கு கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மாற்று வீரராக அணியில் இணைந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் தன்னுடைய பேட்டிங் திறன் மூலம் நிரூபித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தக்க வைத்துக் கொள்ளும். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டெவால் பிரவீஸ் மாற்று வீரராக சென்னையில் இணைந்தார். மிடில் ஓவர்களில் ரன்கள் அடிக்க சிஎஸ்கே தினேரி வந்த நிலையில் அதனை அப்படியே தன் கைவசம் எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களை துவம்சம் செய்யும் திறனை கொண்டுள்ள இவரை நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணி தக்க வைத்துக்கொள்ளும்.
வன்சி பீடிக்கு மாற்று வீரராக வந்த மற்றொரு விக்கெட் கீப்பர் உர்வில் படேல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். முதல் பந்து முதலே அடிக்க வேண்டும் என்ற இவரது இன்டன்ட் எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவரையும் சென்னை அணி நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும். மேலும் இந்த ஆண்டு புதிதாக சென்னை அணியில் இணைந்த அன்சுல் கம்போஜ், கலில் அகமது, நூர் அகமது ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே அவர்களும் நிச்சயம் தக்க வைத்துக்கொள்ளப்படுவார்கள். மேலும் ஜடேஜா, சிவம் துபே ஆகியோரும் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பட்டியலில் உள்ளனர்.
இவர்களை தவிர ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே, தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர், அஸ்வின் ஆகியோர் சென்னையில் இருந்து கழட்டி விடப்பட அதிக வாய்ப்புள்ளது. இவர்களில் சிலரை மினி ஏலத்தில் குறைந்த விலையில் சென்னை அணி எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல தோனி ஓய்வு அறிவிக்கும் பட்சத்தில் அவருக்கு மாற்று வீரரையும் சென்னை அணி மினி ஏலத்தில் எடுக்கும்.
மேலும் படிங்க: RCB IPL final history: ஆர்சிபி எத்தனை முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது? முழு விவரம்!