காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

காரைக்கால்,

மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் 14 மற்றும் 21ம் தேதிகளை வேலை நாட்களாக அறிவித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.