2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 03) அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ராயஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதியது. இதனையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி தனது 18 ஆண்டுகால ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. 18 ஆண்டுகள் கனவு நிறைவேறியதால், ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி பொது இடங்களிலும் ஆராவாரம் செய்து வந்தனர்.
இதனையடுத்து இன்று (ஜூன் 04) பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சின்னசாமி மைதானம் மட்டுமின்றி மெட்ரோவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்டம் நெரிசலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பல தரப்பினரும் ஆர்சிபி அணியின் நிர்வாகத்தின் மீதும், மாநில அரசு மீதும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். மேலும் கர்நடகா அரசு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தது. துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் தனது இரங்கலை தெரித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே “கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள் என தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளாவது, கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள். இன்று ஆர்சிபியின் வெற்றியைக் கொண்டாடும் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோல் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான ஹர்ஷா போக்லே “இந்த ஒரு அழகான கொண்டாட்டத்திற்கு மத்தியில் நடந்த உயிர் இழப்புகளைப் படித்து மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் படிங்க: ஆர்சிபி வெற்றி பேரணி.. 11 பேரின் உயிர் பறிபோனதற்கு இதுதான் காரணமா? என்ன நடந்தது?
மேலும் படிங்க: மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கர்நாடக துணை முதலமைச்சர்!