சென்னை: தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 11ந்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 10ந்தேதி முதல் 12ந்தேதி வரை, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் இடியுடன் […]
