மதுரை: நாள் ஒன்றுக்கு எவ்வளவு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை? செய்யப்படுகிறது, தமிழக அரசு எவ்வளவு மதுபான கொள்முதல் செய்கிறது, என்பதை இணையதளத் தில் பதிவேற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக ஆர்வலரான, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் […]
