சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 7 நக்சலைட்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் தொடர் என்​க​வுன்​டர் சம்​பவங்​களில் இரு முக்​கிய தலை​வர்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​ட​தாக போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர்.

சத்​தீஸ்​கரின் பீஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள இந்​தி​ராவதி தேசி​யப் பூங்​கா​வின் அடந்த வனப் பகு​திக்​குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்​கை​யில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: கடந்த 3 நாட்​களில் நடை​பெற்ற தொடர் என்​க​வுன்ட்​டர் சம்​பவங்​களில் 2 பெண்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் நரசிம்​மாசலம் என்​கிற சுதாகர், பாஸ்​கர் என்​கிற மைலரபு அடெல்லு ஆகியோர் முக்​கிய தலை​வர்​கள் ஆவர்.

இவர்​களில் சுதாகர் பற்​றிய தகவலுக்கு ரூ.40 லட்​ச​மும் பாஸ்​கர் பற்​றிய தகவலுக்கு ரூ.45 லட்​ச​மும் கூட்டு வெகும​தி​யாக சத்​தீஸ்​கர் மற்​றும் தெலங்​கானா அரசுகள் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தன. சுதாகர் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் நடமாட்​டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பாது​காப்பு படை​யினர் கடந்த 4-ம் தேதி தேடு​தல் வேட்டை தொடங்​கினர். என்​க​வுன்ட்​டரில் இறந்த மற்ற 5 நக்சலைட்​கள் இன்​னும் அடை​யாளம் காணப்​பட​வில்​லை.

சம்பவ இடத்​திலிருந்து இருஏகே-47 ரக துப்​பாக்​கி​கள், வெடிபொருட்​கள் உள்​ளிட்​டவை கைப்​பற்​றப்​பட்​டன. அங்கு நக்சலைட்​களை தேடும் பணி தொடர்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​. சத்​தீஸ்​கரில் கடந்த 3 வாரங்​களில் நக்சலைட்​களுக்கு எதி​ரான 3-வது மிகப்​பெரிய நடவடிக்கை இது​வாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.