டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் வெற்றி

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திண்டுக்கல் அணி அடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் திருப்பூர் அணி 16.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.அந்த அணியில் அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் எடுத்தார் . திருப்பூர் அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 94 ரன்கள் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடியது.

தொடக்கம் முதல் அந்த அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. குறிப்பாக திருப்பூர் அணியில் துஷார் ரேஜா சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார். இறுதியில் 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் 94 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.