மராட்டிய தேர்தலில் முறைகேடா? மக்கள் தீர்ப்பை ராகுல்காந்தி அவமதிக்கிறார் – தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதற்கிடையே மராட்டிய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மக்களை சமாதானப்படுத்தமுடியாவிட்டால் அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள். மக்கள் ராகுல்காந்தியை நிராகரித்துவிட்டனர். அதற்கு பழி வாங்கும் விதமாக அவர் மக்களையும் அவர்களின் தீர்ப்பையும் நிராகிக்கிறார், அவமதிக்கிறார். ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொண்டு நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் மக்களுடனான உங்கள் தொடர்பு எங்கே இல்லை. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சுயபரிசோதனை செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் ராகுல்காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைவராக உள்ளார். பீகார் உள்பட வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்களில் எதிர்கால தோல்விகளுக்கு காங்கிரஸ் முன்னால் தலைவர் சாக்குபோக்குகளை தயாரித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.