உ.பி.யில் 25 விற்பனையாளர்கள் உரிமம் ஒரு மாதம் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் வாக​னங்​களை பதிவு செய்யும்போது வாகன விற்​பனை​யாளர்​கள் பலர் விதி​முறை​களை முறை​யாக பின்​பற்​று​வ​தில்லை என்ற புகார் உள்​ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்​பனை​யாளர்​களின் வர்த்தக உரிமங்​களை ஒரு மாதத்​துக்கு நிறுத்தி வைத்​துள்​ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்​கிய இடைநீக்க காலத்​தில் லக்​னோ, பாராபங்​கி, சீதாபூர், குஷிநகர், மொர​தா​பாத் மற்​றும் பிர​யாக்​ராஜ் உள்​ளிட்ட மாவட்​டங்​களின் விற்​பனை​யாளர்​கள் சிக்கி உள்​ளனர்.

இந்த விற்​பனை​யாளர்​கள் 25 பேரும், வாக​னங்​களை விற்​கவோ அல்​லது பதிவு கோரிக்​கைகளை பதிவேற்​றவோ தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய அளவில் புதிய வாக​னங்​கள் பதிவுக்​கான ‘வாஹன்’ இணை​யத்​தி​லும் இந்த 25 விற்​பனை​யாளர்​களும் நுழைய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உ.பி. போக்​கு​வரத்து ஆணை​யர் அலு​வல​கத்​தில் இருந்து வெளி​யான அறிக்​கை​யில், ‘‘சம்​பந்​தப்​பட்ட 25 விற்​பனை​யாளர்​களை​யும் பலமுறை எச்​சரித்​தோம். கடந்த ஜனவரி முதல் மே 2025 வரையி​லான அவர்​களது பதிவு​கள் குறித்து தீவிர ஆய்வு நடத்​தப்​பட்​டது. 25 விற்​பனை​யாளர்​களுக்​கும் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது. வாக​னப்​ப​திவு துறை போதிய அவகாசம் வழங்​கி​யும், அவர்​கள் தங்​கள் நடவடிக்​கையை மேம்​படுத்​தவோ அல்​லது திருப்​தி​கர​மாக பதிலளிக்​கவோ தவறி​விட்​டனர்​’’ என்​று குறிப்​பிடப்​பட்​டு உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.