தனியார் வங்கி வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் ரூ.4.58 கோடி சுருட்டிய பெண் அதிகாரி கைது

கோட்டா: ​ராஜஸ்​தான் மாநிலம் கோட்டா பகு​தி​யில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்​ளது. இங்கு வாடிக்​கை​யாளர் தொடர்பு மேலாளராக பணி​யாற்​றிய​வர் சாக் ஷி குப்​தா. இவர் குறைந்த கால கட்​டத்தில் அதிக பணத்தை சம்​பா​திக்க ஆசைப்​பட்​டுள்​ளார். அதற்​காக வங்​கி​யில் வாடிக்​கை​யாளர்​கள் வைத்​திருந்த வைப்பு நிதியை சிறிது சிறி​தாக எடுத்து பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளார். ஆனால், பங்​குச் சந்​தை​யில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்​பட்​டது. அதனால், வாடிக்​கை​யாளர்​களின் வங்கி கணக்​கில் அந்​தப் பணத்தை மீண்​டும் செலுத்த முடிய​வில்​லை.

எனினும், பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்​பா​திக்க, கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை​யில் 41 வாடிக்​கை​யாளர்​களின் வங்கி வைப்பு நிதி​யில் இருந்து ரூ.4.58 கோடியை எடுத்​துள்​ளார். இந்​நிலை​யில், ஒரு வாடிக்​கை​யாளர்​கள் வங்​கிக்கு வந்து தனது வைப்பு நிதி பற்றி விசா​ரித்​துள்​ளார். அப்​போது​தான் வைப்பு நிதி​யில் மோசடி நடந்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது. இதையடுத்து கடந்த பிப்​ர​வரி மாதம் 18ம்- தேதி வங்கி மேல​தி​காரி​கள் போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளனர்.

அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வந்​தனர். அப்​போது சாக் ஷி குப்​தா​வின் கைவரிசை கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, நேற்​று​முன்​தினம் இரவு தனது சகோ​தரி​யின் திரு​மணத்​தில் பங்​கேற்​றிருந்த சாக் ஷியை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இதுகுறித்து விசா​ரணை அதி​காரி இப்​ராகிம் கான் கூறிய​தாவது: வங்​கி​யில் வாடிக்​கை​யாளர்​கள் வைத்​துள்ள வைப்பு நிதி​யின் இணை​யதள லிங்க்கை சட்​ட​விரோத​மாகப் பயன்​படுத்தி ரூ.4.58 கோடியை சாக் ஷி எடுத்​துள்​ளார். அந்த பணத்தை பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அதற்​காக வங்கி வாடிக்​கை​யாளர்​களின் மொபைல் போன் எண்​களை​யும் கணக்​கு​களில் மாற்றி உள்​ளார்.

போன் எண்கள் மாற்றம்: அவற்​றுக்​குப் பதில் தனது குடும்​பத்​தா​ரின் மொபைல் எண்​களை பதிவு செய்​துள்​ளார். அதனால், வைப்பு நிதி​யில் இருந்து பணம் எடுக்​கும் தகவலோ அல்​லது ஓடிபி.யோ வாடிக்​கை​யாளர்​களின் மொபைல் போனுக்கு செல்​ல​வில்​லை. எனவே, வைப்பு நிதி​யில் இருந்து சாக் ஷி தைரிய​மாக அடிக்​கடி பணம் எடுத்து வந்​துள்​ளார். இவ்​வாறு வி​சா​ரணை அதி​காரி இப்​ராகிம்​ கான்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.