மீண்டும் இந்திய அணியில் இடம் பெரும் விராட் கோலி! வெளியான முக்கிய அப்டேட்!

தற்போது ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து, சர்வதேச போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் பைனல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்களது 18 வருட கனவை நினைவாக்கி உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி பங்கும் முக்கியமானது. இந்த சீசனில் 15 போட்டிகளில் கிட்டத்தட்ட 657 ரன்கள் அடித்துள்ளார். இது அணிக்கு மிகவும் உதவியது. ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக விராட் கோலி விளையாடுவார் என்றாலும், சர்வதேச போட்டிகளில் அடுத்து எப்போது விளையாடுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். 

காரணம் விராட் கோலி ஒரு போட்டியில் இருந்தாலே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளதால் அடுத்ததாக இந்திய அணிக்காக எப்போது விளையாடுவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த ஒரு நாள் தொடர்பான அட்டவணை பற்றி பார்ப்போம். ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். தற்போது வரும் ஜூன் 20 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். 

2027 ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலி? 

ஆகஸ்ட் 17ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறுகிறது. விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட உள்ளார். டெஸ்ட் போட்டிக்கு கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கி வருகிறார். இருப்பினும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவே தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தயாராக உள்ளனர். சவுத் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் நபிபியா ஆகிய நாடுகளில் 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் விராட் கோலி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெற இருக்கிறார். 

2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இவை அனைத்திலும் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 14,181 ரன்கள் அடித்துள்ளார் விராட் கோலி, இதில் 51 சதங்களும் அடங்கும். இதன் மூலம் இந்த பார்மட்டில் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார். 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 74 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக விராட் கோலி இருந்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.