இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் சென்ற அவரது மனைவி மாயமான நிலையில் அவர் காணாமல் போனதாக காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சோனம் நேற்றிரவு உ.பி. மாநிலம் காஜிபூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். […]
