ரூ.4 கோடி மாயம்! வங்கி மோசடி பிடியில் சிக்காமல் இருக்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!

How To Avoid Bank Fraud Tips: ராஜஸ்தானின் கோட்டா நகரத்திலிருந்து அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளது. அங்கு ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் பலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். தற்போது அந்த பெண் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

ரூ.4 கோடி கையாடல் செய்த ஐசிஐசிஐ வங்கி ஊழியர்

ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் மேனேஜராக இருந்த சாக்ஷி குப்தா 43 வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4 கோடியே 58 லட்சம் பணத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் வங்கியில் உள்ள வெவ்வேறு கணக்குகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை மாற்றி உள்ளார். அதன் பிறகு அவர் அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். 

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்

சைபர் மோசடி, சிம் மாற்றம் மற்றும் கோட்டா நகரத்தில் நடந்த சம்பவங்களால், பல அப்பாவி மக்களின் வங்கிக் கணக்குகள் காலியாகின்றன. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான சில சிறப்பு வழிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

வங்கி மோசடி குறித்து எச்சரிக்கை

வங்கிக் கணக்கில் உள்ள தொகையின் நிலையை அறிய வங்கி தரப்பில் இருந்து வரும் செய்தியை மட்டும் நம்பியிருக்காதீர்கள். பல நேரங்களில் எண் மாற்றம் அல்லது சிம் பரிமாற்றம் காரணமாக, வங்கியிலிருந்து வரும் செய்தி உங்களைச் சென்றடைவதில்லை. 

வங்கி முறைகேடுகளை தவிரிக்க 5 வழிகள்

எனவே, இதுபோன்ற முறைகேடுகளை தவிரிக்க 5 வழிகள் குறித்து பார்ப்போம். அதைப் பின்பற்றி உங்கள் வங்கி இருப்பை நீங்களே சரிபார்க்கலாம்.

வங்கி அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்துங்கள்

வங்கிக் கணக்கில் உள்ள தொகையைத் தொடர்ந்து சரிபார்த்துக் கொண்டே இருங்கள், வங்கியின் மொபைல் செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிலும் அதிகாரப்பூர்வ செயலிகள் உள்ளன, அதன்மூலம் வங்கி இருப்பு மற்றும் உங்கள் வங்கிக் கணக்கு குறித்து தெரிந்துகொள்ளலாம்.

RD மற்றும் FD குறித்து எச்சரிக்கை

வங்கியில் இருக்கும் RD மற்றும் FD மீது ஒரு கண் வைத்திருங்கள். இதற்காக நீங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியின் உதவியைப் பெறலாம். வங்கியின் செயலியில் FD மற்றும் RD இன் அறிக்கை மற்றும் இருப்பு நிலை குறித்து விவரங்கள் உள்ளது. யாராவது அந்தத் தொகையை எடுத்தாலோ அல்லது மாற்றியாலோ, உடனடியாக உங்களுக்குத் தகவல் கிடைக்கும்.

வங்கி மிஸ்டு கால் வசதி

உங்கள் வங்கிக் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க மிஸ்டு கால் சேவையைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் மிஸ்டு கால் பேங்கிங் வசதியை வழங்குகிறது. இந்த சேவையின் உதவியுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் செய்தல், வங்கி இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட் உங்களுக்குக் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.