மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 3,00,000 இலக்கை வெற்றிகரமாக சந்தைக்கு வந்த 32 மாதங்களில் கடந்துள்ளது.
வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் 6AT உடன் சுஸுகி ALLGRIP SELECT 4×4 என பல்வேறு மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்ற 2025 கிராண்ட் விட்டாரா காரின் அனைத்திலும் 6 ஏர்பேக்குகள் உட்பட அனைத்து இருக்கைகளுக்கும் 3-புள்ளி ELR இருக்கை பெல்ட்கள், மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் அமைப்பு, ஹில் ஹோல்ட் அசிஸ்டுடன் கூடிய மின்னணு ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (EBD) உடன் கூடிய முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் பெற்றுள்ளது.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறையின் மூத்த நிர்வாக அதிகாரி திரு. பார்த்தோ பானர்ஜி கூறுகையில், “மாருதி சுசூகியின் மீது நம்பிக்கை வைத்ததற்காக எங்கள் 3 லட்சம் வலுவான கிராண்ட் விட்டாரா குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். நடுத்தர எஸ்யூவி சந்தையில் மாருதியை வலுப்படுத்துவதில் கிராண்ட் விட்டாரா இருந்து வருகிறது, மேலும் இந்த மகத்தான மைல்கல்லை இவ்வளவு குறுகிய காலத்தில் அடைவது தொழில்துறைக்கு ஒரு புதிய அளவுகோலாகும்.
இன்றைய நகர்ப்புற, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் முற்போக்கான நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா, துணிச்சலான அழகியல், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் விரிவான பாதுகாப்பு அம்சங்களை சிறப்பாக இணைத்து, ஒரு தொழில்நுட்ப SUV ஆக அதன் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.”
“கிராண்ட் விட்டாராவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ‘Driven by Tech’ என்ற புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். என குறிப்பிட்டார்.