இந்தியா – டெரரிஸ்தான் என சிந்திக்க வேண்டும் – ஜெய்சங்கர்

பிரஸ்ஸல்ஸ்,

பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் , ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை செயலாளர் காஜா ஹலாசை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதில்,

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடைப்பட்டது கிடையாது. இது பயங்கரவாத பயிற்சி மற்றம் மிரட்டலுக்கு அளிக்கப்பட்ட பதிலடி. இதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா அல்லது பாகிஸ்தான் என சிந்திக்க வேண்டாம். இந்தியா – டெரரிஸ்தான் என சிந்திக்க வேண்டும்.

அனைத்து வடிவிலும் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் புரிந்து கொண்டு உள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.