இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

India vs England Test Series: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிய கேப்டன் சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி ஏற்கனவே  அங்கு சென்றுவிட்டது. டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களும் லார்ட்ஸில் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் முக்கிய பிளேயரைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்திய அணியின் துருப்புச்சீட்டு

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போகிறவர் அர்ஷ்தீப் சிங் தான். ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் முழுவதுமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என ஏற்கனவே இந்திய அணி அறிவித்துவிட்டது. காயம் காரணமாக நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் உள்ளார். அவருக்கு அதிக பணிச்சுமை கொடுக்க கூடாது என்பதற்காக இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு  படைக்கு லீடராக அர்ஷ்தீப் சிங் தான் இருக்கப்போகிறார். அவரின் பந்துவீச்சு இந்திய அணியின் டெஸ்ட் போட்டி வெற்றிகளை தீர்மானிக்கப்போகிறது. இது குறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

அர்ஷ்தீப் சிங் லேட்டஸ்ட் பேட்டி

இன்று பயிற்சியை அனைத்து பிளேயர்களும் சிறப்பாக மேற்கொண்டோம். என்னைப் பொறுத்தவரையில் பந்துகளை நல்ல ரிதத்தில் வீசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிவப்பு நிற பந்து கைகளில் இருந்து எப்படி ரிலீசாகிறது, அதனை பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என பார்த்தேன். நான் உட்பட அணியில் இருக்கும் பல பிளேயர்கள் நீண்ட நாட்களாக வெள்ளை பந்து போட்டிகளை மட்டுமே விளையாடி இருக்கிறோம். அதனால் எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இன்றைய பயிற்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து அதனை பயிற்சி செய்தோம். ஒட்டுமொத்தமாக எல்லா பிளேயர்களும் நல்ல நிலையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என அர்ஷ்தீப் சிங் பேட்டியில் கூறினார். 

வெற்றிக்கு அதிக உழைப்பு தேவை

தொடர்ந்து பேசிய அர்ஷ்தீப் சிங் “நாங்கள் சரியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு திடமான திட்டமிடல் தேவை. அப்போது தான் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். சாய் சுதர்சன் முதல் முறையாக அணியில் சேர்ந்துள்ளார், மேலும் அவர் மிகவும் கச்சிதமாக பயிற்சியில் விளையாடினார். சுப்மன் கில்லும் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார். நானும் சீக்கிரம் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்துவதற்கு தேவையான பயிற்சியில் ஈடுபட்டேன்” என தெரிவித்தார். 

மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?

மேலும் படிங்க: குளவுஸை தூக்கி வீசிய அஸ்வின்! தக்க பதிலடி கொடுத்த TNPL – முக்கிய அப்டேட்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.