இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சீனியர் வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
மேலும் படிங்க: WTC Final: ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா – பிளேயிங் லெவன், பலம், பலவீனம் என்ன?
இந்தியா ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்று இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் இடம் பெறாத, இந்தியா ஏ அணியில் இடம் பெற்ற வீரர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் இங்கிலாந்திலேயே தங்க உள்ளார். காரணம் இங்கிலீஷ் கண்ட்ரி சாம்பியன்ஷிப் (English County Championship) தொடரில் யார்க்ஷயர் (Yorkshire) அணிக்காக ருதுராஜ் விளையாட உள்ளார். யார்க்ஷயர் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட உள்ளார்.
யார்க்ஷயருக்காக ருதுராஜ் கெய்க்வாட் ஐந்து கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளார். ஜூலை 22 முதல் நார்த் மரைன் ரோடு மைதானத்தில் சர்ரேக்கு எதிரான முதல் போட்டி நடைபெற உள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவரையில் ருதுராஜ் யார்க்ஷயர் அணியுடன் பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது. யார்க்ஷயர் அணிக்காக விளையாடும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், புஜாரா ஆகிய வீரர்கள் விளையாடி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 19 வயதி யார்க்ஷயர் அணிக்காக விளையாடினார். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் யார்க்ஷயர் அணி மிகவும் வெற்றிகரமான அணியாகும்.
YCCC is delighted to announce the overseas signing of Ruturaj Gaikwad
He will join up with the Yorkshire squad ahead of the @CountyChamp game vs Surrey at Scarborough & will stay with the White Rose until the end of the season
Read more https://t.co/SMg3JmRuux pic.twitter.com/1AGeSgG4tQ
— Yorkshire CCC (@YorkshireCCC) June 10, 2025
ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
“இங்கிலாந்து உள்நாட்டு சீசன் முழுவதும் யார்க்ஷயருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் எனது இலக்காக இருந்து வருகிறது, மேலும் இங்கிலாந்தில் யார்க்ஷயரை விட பெரிய கிளப் எதுவும் இல்லை. இந்த சீசனின் முக்கியமான பகுதியாக இருக்கும் போட்டியில் களமிறங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எங்களுக்கு சில முக்கியமான ஆட்டங்கள் உள்ளன, மேலும் ஒருநாள் கோப்பை சில வெள்ளிப் பதக்கங்களை வெல்ல ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: இந்திய அணியில் இடம் இல்லை.. அதனால் இங்கிலாந்து செல்லும் சிஎஸ்கே வீரர்!