இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. காரணம் சில முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா என முக்கிய நாடுகளில் இருக்கும் வீரர்கள் எதிர்பாராத விதமாக திடீர் ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த முக்கியமான வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் கடைசியாக இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்தார். ஸ்மித் இதுவரை 170 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5800 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்களும் அடங்கும், ஒரு நாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 

மேலும் படிங்க: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மற்றொரு வீரரான மேக்ஸ்வெல் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 149 ஒருநாள் போட்டியில் விளையாடி 3990 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 77 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 

மார்கஸ் ஸ்டோனிஸ்

ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் வீரரான மார்கஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா அணிக்காக 74 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1495 ரன்கள் அடித்துள்ளார், மேலும் 48 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஸ்டோனிஸ்ஆஸ்திரேலியா அணிக்காக தற்போது டி20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார். 

ஹென்ரிச் கிளாசென்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் தன்னுடைய 33வது வயதில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிளாசென் தென் ஆப்பிரிக்கா அணிக்காக60 ஒரு நாள் போட்டி, 58 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

மார்ட்டின் குப்டில்

நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் வீரரான மார்ட்டின் குப்டில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 198 ஒரு நாள் போட்டிகளிலும், 122 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் குப்டில். 

விருத்திமான் சஹா

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் விருத்திமான் சஹா. இருப்பினும் போதிய வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வை அறிவித்துள்ளார். 

ரோகித் சர்மா 

இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா  டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4300 ரன்கள் அடித்துள்ளார், இதில் 10 சதங்களும் அடங்கும்/

விராட் கோலி 

இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விராட் 9230 ரன்கள் அடித்துள்ளார். இதில் 30 சதங்களும் அடங்கும், இந்திய அணிக்காக இனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளார் விராட் கோலி.

மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.