ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அவரது நிதானமும் அதிரடி எதிரணியை கலங்கடிக்க செய்யும். 2021 பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று கொடுத்த பெருமை அவரை சேரும். சமீபமாக அவரது பேட்டிங் ஃபார்ம் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சதம் விளாசி, அதனை மீட்டெடுத்தார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த நிலையில், 2025 ஆண்டில் தொடக்கத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்திருந்தார். அதனை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி.
இது குறித்து பேசிய அவர், ரிஷப் பண்ட் நல்ல வீரர் தான். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாடியது போல், எப்போதும் விளையாட வேண்டும். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியதை நான் பார்த்தேன். நான் பார்த்ததை சுத்தமாக விரும்பவில்லை. ரிஷப் பண்ட் நிறைய ஷாட்கள் ஆடினார். தொடர்ந்து பேட்டை சுழற்றிக் கொண்டே இருந்தார்.
முன்னதாக அவர் அடித்த பந்துகள் மைதானத்தை விட்டு வெளியே சென்று இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். ரிஷப் பண்ட்டிடம் நல்ல தடுப்பாட்டம் உள்ளது. எனவே அவர் நிறைய தடுத்து விளையாட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் மிகவும் மோசமான ஷாட்கள் ஆடி ஆட்டமிழந்து இருந்தார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட, அவரை முட்டாள், முட்டாள், முட்டாள் என கமண்ட்ரியில் இருந்தபடி, திட்டினார். அவர் அந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 255 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரது சராசரி 28.3ஆக இருந்தது. இதனால், அவர் மீது பலரும் விமர்சனம் வைத்தனர். இந்த நிலையில், தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.
மேலும் படிங்க: குஜராத் விமான விபத்து: கோலி, ரோகித், பாண்டியா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்!
மேலும் படிங்க: 138 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. 6 விக்கெட்களை வீழ்த்திய கம்மின்ஸ் சாதனை!