நம்மில் பலருக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை 2025 ஐபிஎல் தொடரின் மூலம் அறிவோம். 14 வயதே ஆன அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவார் என பலரும் அவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்து பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் வைபவ் சூர்யவன்சி மீது பல்வேறு அதிரடியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
வைபவ் சூர்யவன்சி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்றால், அவரது உடல் இன்னும் மேம்பட வேண்டும் என கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், வைபவ் சூர்யவன்சியால் 5 நாட்கள் நின்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா? அது தான் ஒரு கிரிக்கெட் வீரரின் முன்னால் இருக்கும் சவால்.
எனது பார்வை எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதுதான் இருக்கும். நீங்கள் 20 ஓவர்கள் ஆடுவது எளிது. 50 ஓவர்கள் ஆடுவது எளிது. ஆனால் இதை வைத்து ஒருவரால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட முடியும் என நான் கூற மாட்டேன். நீங்கள் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்றால், அதற்கேற்ற உடல் தகுதி வேண்டும்.
தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். ஏனென்றால், டி20 போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இன்று 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் கூட திணறுகிறார்கள். அந்த இடத்தில் தான் நாம் இருக்கிறோம். அனைத்து பயிற்சியாளர்களும் ஏசி ரூமில் இருந்துக்கொண்டு செயல்படுகிறார்கள். நான் 48 டிகிரி வெயிலில் இருந்து வேலை செய்வேன். யுவராஜ் சிங் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் படிங்க: கடைசியாக 2008ல் தான்… ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 இலக்கை சேஸ் செய்யுமா தென்னாப்பிரிக்கா?
மேலும் படிங்க: ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர்… அவசர அவசரமாக இந்தியா வந்த கம்பீர் – என்னாச்சு?