டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவினர், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே […]
