லோக் அதாலத்தில் 1.12 லட்சம் வழக்குகள் தீர்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.632 கோடி இழப்பீடு

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரை​வாக முடிவுக்கு கொண்​டு​வரும் வகை​யில், ஆண்​டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்​கள் நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் சென்னை உயர்​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் மேற்​பார்​வை​யில், தமிழ்​நாடு சட்​டப்​பணி ஆணைக்​குழு தலை​வர் நீதிபதி ஆர்​.சுப்​பிரமணி​யன் வழி​காட்​டு​தல் பேரில் நடந்​தது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.பி.​பாலாஜி, வி.லட்​சுமி நாராயணன், பி.தன​பால், முன்​னாள் நீதிப​தி​கள் எம்​.

ஜோ​தி​ராமன், எம்​.ஜெய​பால், பி.கோகுல்​தாஸ் ஆகியோர் தலை​மை​யில் 6 அமர்​வு​களும், சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நீதிப​தி​கள் எஸ்​.ஸ்ரீம​தி,ஆர்​.​விஜயகு​மார், கே.கே.​ராமகிருஷ்ணன் ஆகியோர் தலை​மை​யில் 3 அமர்​வு​களும் அமைக்​கப்​பட்​டன. இதே போல, மாவட்​டம், தாலுகா அளவில், நீதிப​தி​கள் தலை​மை​யில் மாநிலம் முழுதும் 499 அமர்​வு​கள் அமைக்​கப்​பட்​டன. இந்த அமர்​வு​கள் முன் பட்​டியலிடப்​பட்ட 1 லட்​சத்து 12 ஆயிரத்து 561 வழக்​கு​களை இரு தரப்​பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதிப​தி​கள் முடிவுக்கு கொண்டு வந்​ததனர். இதன் வாயி​லாக ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதனை தமிழ்​நாடு மாநில சட்​டப்​பணி​கள் ஆணை​யக்​குழு உறுப்​பினர் செயலர் எஸ்​.​பால​கிருஷ்ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.