துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு நேரங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 8ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், சில இடங்களில் மாட்டிறைச்சி வீசப்பட்டதாகவும் முதலமைச்சர் சர்மா குற்றம்சாட்டியிருந்தார். […]
