"ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்"-அன்புமணி பேச்சு

முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் ‘கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்’ என்று அறிவித்து தனது மகன் அன்புமணி தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இதையடுத்து தந்தையர் தினமான இன்று (ஜூன் 15)  திருவள்ளூரில் பாமக பொதுக்குழு கூட்டத்தில், “இன்று தந்தையர் தினம். மருத்துவர் ஐயா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர் ஐயா நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி, மகிழ்ச்சியோடு 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அது மகனாக என்னுடைய கடமை.” என்று பேசியிருந்தார்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி – ராமதாஸ்

`கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள்; இது நீங்கள் உருவாக்கிய கட்சி’- ராமதாஸ் குறித்து பேசிய அன்புமணி

இப்படியாக ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் பாமக’வில் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், “நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் அந்த திருஷ்டி எல்லாம் போய்விட்டது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.