'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி, “நான் எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் சாதனைகள் என சொல்லக் கூடிய விஷயங்களைப் பார்த்த பிறகும் அடுத்து என்ன என்ற கேள்விதான் வரும்.

அட்லி
அட்லி

ஆனால் இந்த மேடையில் நான் முதன்முதலாக எமோஷனலாக உணர்கிறேன். நான் கல்லூரியில் உண்மையைப் பேசியதே இல்லை. ஆனால் இன்று உண்மையைப் பேசும் சூழ்நிலை. அதனால் பொய் சொன்னால் இரும்பிவிடுவேன்.

நான் இந்த காலேஜில் பயங்கரமான மாணவன் (இறுமுகிறார்). ஊருக்கு யாரா இருந்தாலும் வீட்டுக்கு அரசனா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நம்ம அம்மா நம்மளை வீட்டுக்கு அரசனா பாத்திருப்பாங்க. என்னை இந்த காலேஜ் ஆரம்பத்தில் இருந்தே அரசனாகத்தான் பார்த்தது. 

பொதுவாக என்னுடைய படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க. நான் இன்னைக்கு ஒரு உண்மையை சொல்றேன். நான் என் வாழ்க்கையில நான் பார்த்த விஷயங்களைத்தான் எடுத்தேன். உதாரணமாக  ராயப்பன், என்னுடைய தலைவர் என் சான்ஸ்லர் ஜேப்பியார் சாரைப் பார்த்து இன்ஸ்பயராகி தான் எழுதினேன். 

காலேஜில் இருந்து போகும்போது எதையும் மிஸ் பண்ண கூடாது என நினைப்போம். ஆனால் நான் சொல்கிறேன் உங்களை மிஸ் பண்ணிடாதீங்க, உங்களுக்குள்ள இருக்கிற காலேஜ் பர்சனாலிட்டியை மிஸ் பண்ணிடாதீங்க. 

அட்லி – ப்ரியா

வாழ்க்கையில பெரிய வெற்றி நல்ல family man ஆக இருக்கிறதுதான். 1000 கோடி வசூல், இவரோட படம் பண்ணிட்டோம், அவரோட பண்ணிட்டோம் எதுவும் இல்ல. ரொம்ப ரொம்ப முக்கியமானது நல்ல family man ஆக இருக்கிறதுதான். என் அப்பா, அம்மா நான் ஒரு டைரக்டரா ஆகுற வரை என்ன பாத்துகிட்டாங்க, டைரக்டர்ல இருந்து இப்ப என்னவா இருக்கேனோ அதுக்கு என் மனைவி காரணம்.

அங்கிருந்து நான் ஒரு நல்ல மனிதனா மாற என் மகன் காரணம். இவங்க நான்குபேர் மட்டும் என் குடும்பம் இல்லை. என் அண்ணன் தளபதி விஜய். இன்னும் நிறைய பேர் இருக்காங்க. என் குடும்பம் ரொம்ப பெருசு. வாழ்க்கையில உங்க குடும்பத்தோட அளவை ரொம்ப பெருசாக்கிக்கங்க. ஒரு குட்டி கதையோட முடிக்கிறேன். ஒரு கோவிலில் உள்ளே சிலையும் வெளியே படிக்கட்டும் இருந்ததாம். எல்லோரும் படிக்கட்டை மிதித்து நடந்து சிலையை வணங்கினார்கள். 

அட்லி
அட்லி

கோவில் பூட்டியப் பிறகு படிக்கட்டு சிலையிடம் கேட்டதாம், “நீயும் கல்தான் நானும் கல்தான். ஏன் என்னைத் தாண்டி செல்கிறார்கள் உன்னை வணங்குகிறார்கள்?” அதற்கு சிலை சொன்னதாம், “உன்னை ரெண்டு பக்கமும் வெட்டி படிக்கட்டாக்கிவிட்டார்கள். என்னை ஆயிரம் பேர் வச்சு செதுக்கி சிலை ஆக்கியிருக்கிறார்கள். அதனால் எனக்கு கூடுதல் மரியாதை இருக்கத்தான் செய்யும்.” இப்படி உங்களை இன்று நிறைய பேர் சுத்தி அடித்தால் நீங்கள் நாளைக்கு பெரிய ஆளாக வருவீர்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.